
நிலவை தொட்டு எழுதிய கவிதைகள் -மறைந்து போயின-
மலரை தொட்டு எழுதிய கவிதைகள் -உதிர்ந்து போயின-
வெளிச்சம் தொட்டு எழுதிய கவிதைகள்- இருண்டு போயின-
நினைவை தொட்டு எழுதிய கவிதைகள் மட்டும் நெஞ்சத்தில் நிறைந்து கிடக்கின்றன.
நிஜத்தில் நீ என்னை வந்தடைவாய் என்ற நம்பிக்கையில்!!!
- சரோ-