Thursday, May 31, 2012

-வயசுக் கோளாறு-


பார்க்கும் அத்தனை பிகரும் அழகாக தெரிகிறதா? அப்படிஎன்றால் நிச்சயம் உனக்கும் இந்த வியாதி வந்துவிட்டதென்று அர்த்தம் -வயசுக் கோளாறு-

விடுதலை


எப்பொழுதும் தயாராகவே இருக்கிறது எனக்குள் உனக்கான கவிதைகள்
ஒரு முறை சொல்லிவிடு என்னை விரும்புகிறேன் என்று
என் கவிதைகளுக்கு விடுதலை அளித்துவிடுகிறேன்

மனைவியான பின்பு

காதலிக்கும் வரை என்னை உறுதியாக நம்பியவள்
எதற்கெடுத்தாலும் சந்தேகம் கொள்கிறாள் மனைவியான பின்பு
-இந்த பொண்ணுங்களே இப்புடித்தான் குத்துங்க எஜமான் குத்துங்க-

-எல்லாம் ஒரு யூகம் தான் -

பெண்களை குறை கூறும் அனைவரும் யாரோ ஒரு பெண்ணால் கழட்டி விடப்பட்டவர்களாக இருக்கலாம் -எல்லாம் ஒரு யூகம் தான் -

உறைப்பதில்லை

காதலிக்காக பெற்றோரையும் துறக்க தயாராகிவிடும் ஆண்களுக்கு ஒரு போதும் உறைப்பதில்லை
தன் பெற்றோர்கள் தான் முக்கியமென்று கழட்டிவிடும் பெண்களை பார்த்த பின்பும்

Thursday, May 24, 2012

வார்த்தையிலும் ஓவியம்


வார்த்தையிலும் ஓவியம் வரையும் முறையை கற்றுக் கொண்டேன் அவள் பெயர் எழுதிய பின்பு # எங்க வைரமுத்துவ மிஞ்சிருவனொன்னு பயமாருக்கு

தொடர்கிறது என் காதல்


முடிவிலியாய் உன்மேல் தொடங்கிய என் காதலுக்கு நீ முற்றுப் புள்ளி வைத்த பின்னும் தொடர்கிறது -வேறு ஒரு பெண்ணுடன் என் காதல்

கடவுள் இருக்கிறார்

இருக்கும் ஒன்றை இல்லாதது போல் காட்டுவது எளிது இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவது கடினம்.. ஆனாலும் காட்டுகிறார்கள் கடவுள் இருக்கிறார் என்று

-காதலில் மட்டும்-


ஆம் என்று சொல்ல ஆயிரம் முறை யோசிக்கும் பெண்கள் இல்லை வேண்டாம் என்பதை சொல்ல ஒரு நிமிடம் கூட யோசிப்பதில்லை

சரி

எவரும் எதிர்த்து கேள்வி கேட்கவில்லை என்பதற்காக நாம் செய்வதனைத்தும் சரி என்று பொருளாகாது

தவறில்லை

நம் தவறுகள் பிறருக்கு தெரிந்துவிடாதவரை தவறில்லை என்று நினைத்து கொள்கிறோம்

கவிதை


ஏதோ ஒன்றை எழுதினேன் கவிதை என்றாள் "காதல்" என்று எழுதினேன் கன்னத்தில் அறைந்து சென்றாள் #பொண்ணுங்க மனச புரிஞ்சிக்கவே முடியலையே

சந்தேகம்


இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ் பழமொழி# இல்லாதவன் எதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வது என்பதே என் சந்தேகம்

அனுபவமில்லை

வெளியில் பொறுமை காப்பவன் வீட்டில் எறிந்து விழுகிறான் வீட்டில் பொறுமை காட்டுபவன் வெளியில் எறிந்து விழுகிறான்

பெரிய தண்டனை

திருந்திய கொலையாளியை கண்டு பயந்து ஒதுங்குவதை விட பெரிய தண்டனை இருக்கமுடியாது # சும்மா எதையாச்சும் எழுதி வைப்போம் பின்னால யூஸ் ஆவும்

விளிம்பில்

பொய்யின் விளிம்பில் தான் எப்பொழுதும் உண்மையின் உயிர் உசாலாடும் ஆனால் ஒரு போதும் இறப்பதில்லை # ஹ்ம்ம்

உனக்கு தெரியலை

தான் அறிந்து கொண்ட விஷயத்தை பிறருக்கு கூறுகையில் "எனக்கு தெரிஞ்சிருக்கு உனக்கு தெரியலை "என்ற தொனியிலேயே பலரும் எடுத்துரைக்கின்றனர்.

அவசியம்

அவசரம் கருதி உழைப்பதை விட அவசியம் கருதி உழைப்பது தான் வெற்றியை கொடுக்கும்

உனக்கானதல்ல

பலமுறை முயன்றும் உனக்கு அது கிடைக்கவில்லையா?கவலை வேண்டாம் அது உனக்கானதல்ல

பொன்னிற மேனி


தங்கமும் வெட்கி தலை குனிந்தது
என்னவள் பொன்னிற மேனியை கண்ட பொழுது
-கொஞ்சம் ஓவராத்தான் எழுதிட்டமோ-

-இப்ச்-


அவள் தந்த புன்னகைக்கு பரிசாக
இந்த பொன்னகையை அணிவித்தேன்
அதற்கும் ஒரு பரிசு கிடைத்தது -இப்ச்-

தங்கத்தாமரை


தங்கத்தாமரை பற்றி கேள்விபட்டிருக்கிறேன்
இன்று தான் காணமுடிந்தது
அவள் கைகளில் தங்க வளையல்கள்
-இப்டியே புகழ்ந்து புகழ்ந்து எழுதி தான் நாசமா போய்ட்டோம்-

விலைமதிப்பற்றது

தங்கத்தை விலை உயர்ந்ததாக எண்ணி
உனக்கு பரிசளித்த பின்பு தான் தெரிந்தது
அதற்காய் நீ எனக்கு தந்த முத்தம்
அதனை விட விலைமதிப்பற்றது என்று
-சரோ-

Tuesday, May 22, 2012

உன் நினைவுகள்

அணு ஆயுதங்களை விட மோசமானவை உன் நினைவுகள்
என்னுள் ஏற்படுத்திவிட்டன ஆறாத ரணத்தை

ஒப்படைக்கவில்லை

எழுதிய கவிதைகள் அனைத்தும் என்மேல் கோவமாய் இருக்கிறது
உன்னிடம் அவற்றை ஒப்படைக்கவில்லை என்று

எப்பொழுதும் போதையில்

எப்பொழுதும் போதையில் இருப்பதே உன் நினைவுகளில் இருந்து தப்பித்து கொள்வதற்காகத்தான் அன்பே

நம்பிக்கையினிலேயே

அவளுக்கு என்னை பிடிக்கவில்லை என்று இன்றே தெரிந்திட கூடும்
என்ற பயத்தினில் தான் சொல்லவில்லை
இன்னும் நீடிக்கட்டும் அந்த நம்பிக்கையினிலேயே என் காதல்

மறைந்துவிட்டாள்


நிலவுடன் ஒப்பிட்டேன் அவளை
அமாவாசையுடன் ஓடி மறைந்துவிட்டாள்
(பக்கத்துக்கு வீட்டுக்காரன் )

மாமியார் வீட்டில்

என் காதலியை தேடி திரிந்து அவளை கண்கொண்டேன்
அவள் மாமியார் வீட்டில் -சீ அது கல்யாணம் ஆன ஆண்டி-

என் உணர்வுகள்

சரக்கடிக்காமல் எழுதும் கவிதைகள் அவளை வர்ணிப்பது போல்
சரக்கடித்து வரும் கவிதைகள் அனைத்தும் அவளை திட்டுகின்றன
சரக்குக்கு புரிந்த அளவு கூட அவளுக்கு புரியவில்லை என் உணர்வுகள்

என்னவள்

ஒவ்வொரு நாளும்அவளை நினைக்கும் பொழுதினை விளக்கவே என் கவிதைகள்
ஒருநாளும் அதன் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவேயில்லை என்னவள்

நிறைந்து கிடக்கின்றன


நிலவை தொட்டு எழுதிய கவிதைகள் -மறைந்து போயின-
மலரை தொட்டு எழுதிய கவிதைகள் -உதிர்ந்து போயின-
வெளிச்சம் தொட்டு எழுதிய கவிதைகள்- இருண்டு போயின-
நினைவை தொட்டு எழுதிய கவிதைகள் மட்டும் நெஞ்சத்தில் நிறைந்து கிடக்கின்றன.
நிஜத்தில் நீ என்னை வந்தடைவாய் என்ற நம்பிக்கையில்!!!
- சரோ-

ஓரவிழி பார்வையில்


இரவுக்குள் மறைந்திருந்த என் கவிதைகள் யாவும்
விழித்துக் கொண்டன அவள் ஓரவிழி பார்வையில்

ஹ்ஹ்ம் ஹ்ம்ம் ஆம்

மனதை திருடியதாய் வழக்கு தொடர்ந்தேன்
தண்டனை கிடைத்ததென்னவோ எனக்கு தான்
அவளும் ஹ்ஹ்ம் ஹ்ம்ம் ஆம் (அவளும் லவ்ஸ் பன்றேன்ட்டாப்பா)

உறுதியாகிவிட்டது


நான் எழுதுவது அனைத்தும் கவிதை என்று நினைத்துக் கொண்டிருந்தேன்
அவளை பார்ப்பதற்கு முன்பு வரை
இப்பொழுது உறுதியாகிவிட்டது நான் எழுதுவது மட்டுமே கவிதை என்று!!!
அது அட்டு பிகர் மச்சி

ஊதிட்டா மச்சான் அவ



குத்து பாட்டை போல குதூகலமாக எழுதிகொண்டிருந்தேன்
அவளை பற்றிய கவிதைகளை
எல்லாவற்றிற்கும் ஒரே டியுனை போட்டுவிட்டாள்
-சங்கு சத்தம்-

அளவுக்கு அதிகமாய்

அனுதினமும் உன்னை பற்றி எழுதிய கவிதைகளை
என் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது
அளவுக்கு அதிகமாய்
அட்டு பிகரை பற்றி எழுதிவிட்டேன் என்று!!!

நானும் விரும்பினேன்

நானும் விரும்பினேன் அவளும் விரும்பினால்
நான் அவளை அவள் அவனை -என்ன பொழப்புடா சரோ இது-

என்னை மட்டுமே கேட்டவள்

எது வேண்டுமானாலும் கேள் என்ற போது என்னை மட்டுமே கேட்டவள்
இன்று "எண்ணெய்" கேட்கிறாள்...வீட்டுக்கு போகும் போது வாங்கிட்டு போவனும்