Friday, December 28, 2012

எதற்கும் ஓர் எல்லை


எதற்கும் ஓர் எல்லையுண்டு என்பவன் மிக குறுகிய வட்டத்தினுள் வாழ்கிறான்

என்ன வாழ்க்கைடா இது


வாழும் வரை வாழ்க்கை!!! வாழ்க்கை முடியும் முன் வழுக்கை # என்ன வாழ்க்கைடா இது

வெட்டிபய

எதை செய்தாலும் அதில் குறையை மட்டும் காணும் உலகத்தில் எதையுமே செய்யாமலிருக்கிறேன் அதையும் குறை கூறுகின்றனர் # வெட்டிபய

அவ்தானிப்

பெரும்பாலான டாக்டர்களின் கையொப்பம் ECG-யில் வரும் ஏற்ற இறக்கமான கோடுகளை ஒத்திருக்கிறது # அவ்தானிப்

ஓவியமாய்


அழித்துவிட்டு வரையும் ஓவியமாய் காதலிருந்திருந்தால் தேவதாசையோ,ஷாஜகானையோ உலகம் கண்டிருக்காது

ட்விட்டரில்

எண்ணத்தில் எழுவதை எழுதிக் கொண்டிருந்த பலர் எழுத்துக்களை "எண்ணி எண்ணி " எழுதிக் கொண்டிருக்கின்றனர் # ட்விட்டரில்

Saturday, December 15, 2012

சும்மா ஒரு கணிப்பு


தந்தையின் அறிவுரைகளை பின்பற்றாதவர்களே தன் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவார்கள்

தாய்தந்தை


அடித்துவிட்டு பின் ஆறுதல் சொல்லி அன்பு காட்டுபவள் தாய் அடித்துவிட்டு பின் அன்பு காட்டி அறிவுரை சொல்பவர் தந்தை

படித்ததில் பிடித்தது


பிரபாகரன் இருக்கிறாரா?இல்லையா என கேட்பவர்களுக்கு என் பதில்..இருந்தால் அவர் எம் தலைவன் ,இல்லையென்றால் அவர் எம் இறைவன்

"உர்ர்ர்ர்ர்"


அவள் உறங்குவதை ஓவியமாய் தீட்டிவைத்தேன்.. அதிலிருந்தும் "உர்ர்ர்ர்ர்"-குறட்டை சத்தம்

நம்பிக்கை

நல்லவன் எனப்படுபவன் யாரெனில் செய்யும் தவறுகளை பிறரியாமல் செய்ய தெரிந்தவனாவான் # அவனுங்கள தான் நம்புவாங்க

நட்பு !!!!!!!!!!!!!!!!

சரக்கு வாங்கி தந்தது நண்பனா இருந்தா வாந்தி எடுத்தா கூட சொல்லகூடாது அதாண்டா நட்பு